TNEA 2020 : தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

TNEA 2020 : தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த அசோகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஜேஇஇ, மருத்துவப் படிப்பில் சேர நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் பலர் தேசிய அளவிலான கல்லூரிகளில் சேர்வர். அதற்குப் பிறகே தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு முதல்நிலைப் பெறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக செப்டம்பர் முதல் வாரத்தில் ஜேஇஇ தேர்வு நடை பெற்றது. செப்டம்பர் 13-ல் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளி வருவதற்கு முன்பு செப்.17-ல் தமிழகப் பொறியியல் கல்லூரிக ளில் மாணவர் சேர்க்கைக்காகக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுக்குப் பிறகு பலர் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளில் சேரும் நிலையில் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங் கள் காலியாகும் சூழல் ஏற்படும். இந்த காலியிடங்கள் நிரப்பப்படாமல் போக வாய்ப்புள்ளது. இந்த காலியிடங்கள் எவ்வாறு நிரப்பப் படும் என்பதை அரசு தெளிவுபடுத்த வில்லை.
எனவே ஜேஇஇ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவதால் பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வும், அதுவரை தமிழகப் பொறியி யல் மாணவர் சேர்க்கை கலந்தாய் வுக்கான அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ஆண்டு தோறும் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் சேரும்போது, முந்தைய கல்லூரிகளில் காலியிடம் ஏற்படுவது இயல்பானது. அந்த காலியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பதை மனுதா ரர் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதில் திருப்தி ஏற்படாத நிலையில் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews