மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் குவியும் புகார்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் குவியும் புகார்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை மீறி முழுக் கட்டணம் (100 சதவீதம்) செலுத்த கோரும் பள்ளிகள் குறித்த புகார்களை பெற அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. அதன்படி, மின்னஞ்சல் முகவரியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வெளியிட்டனர். இந்த நிலையில் அந்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு முழுக்கட்டணம் செலுத்த சொல்லும் பள்ளிகள் குறித்த புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் மின்னஞ்சல் முகவரிக்கும் 35 புகார்கள் வந்ததாகவும், அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக வந்த புகார்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் புகார் கூறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீசை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கும் நோட்டீசுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் உரிய விளக்கத்தை உடனே அளிக்க வேண்டும். அதன்பின்னர், பள்ளிகள் மீது வந்த புகார் மற்றும் பள்ளிகள் அளித்த விளக்கம் ஆகியவற்றுடன் இணைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்கு அனுப்ப கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews