‘பாரதி திருவிழா 2020’: கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு - முதல் பரிசு ரூ.25 ஆயிரம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 31, 2020

‘பாரதி திருவிழா 2020’: கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு - முதல் பரிசு ரூ.25 ஆயிரம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாரதி திருவிழா 2020’-ஐ கொண்டாடும் வகையில் கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்க வானவில் பண்பாட்டு மையம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி: மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் ‘உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி’ மற்றும் ‘வானவில் சிறுகதைகள்-சிறுகதைப் போட்டி’ என்ற பெயரில் கவிதை, சிறுகதைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கவிதைப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போரின் படைப்புகள் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.சிறுகதைப் போட்டியில் சிறந்த 5 சிறுகதைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளுக்கு தலா ரூ. 1,000 வழங்கப்படும்.
சிறுகதைகளை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டிகளுக்கான விதிமுறைகள், கவிதைகள்-சிறுகதைகள் அனுப்பும் முறை குறித்த விவரங்கள் www.vanavilculturalcentre.com வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews