அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை பாடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 27, 2020

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை பாடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு விவசாயத்தை கற்றுக்கொடுக்கவும், சத்துணவு திட்டத்தில், தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்துக்கொள்ள, பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. / அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை ஒன்றியத்தில், 33 பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதன் மூலம், பள்ளிகள் திறந்ததும், மாணவர்கள் விவசாயம் குறித்து கற்றுக்கொள்வதுடன், தற்சார்பு வாழ்க்கையை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.ஆனைமலை ஒன்றிய ஆணையாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தோட்டக்கலைத்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய மூன்று துறைகள் இணைந்து, காய்கறித்தோட்டம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா, ஐந்தாயிரம் ரூபாய் செலவில் காய்கறித்தோட்டம் அமைக்கப்படுகிறது. துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 33 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தற்போது, கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்களால் காய்கறித்தோட்டம் அமைக்கப்படும். இதற்காக, இவர்களுக்கு தோட்டக்கலைத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர்.பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும். காய்கறித்தோட்டம் அமைக்க இடமில்லாத பள்ளிகளில், மாடித்தோட்டம் அமைக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews