Breaking

Sunday, April 19, 2026

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்


பட்ஜெட் நிதி ஒதுக்காததால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் *சிவகங்கை

பட்ஜெட் நிதி ஒதுக்காததால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம், இதர பணப் பலன்களை பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் அந்தந்த நிதியாண்டுக்குரிய பட்ஜெட் நிதியை பள்ளி கல்வித் துறை ஒதுக்கும்.

அந்த நிதி அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் கணக் குக்கு பிரித்து அனுப்பப்படும்.

ஆனால், இந்த நிதியாண்டுக்குரிய பட்ஜெட் நிதியை இதுவரை சிவகங்கை உட்பட பெரும்பாலான மாவட்டங்களுக்கு அனுப்பவில்லை. மேலும், பள்ளிகளிலிருந்து ஊதியப் பட்டியல், ஈட்டிய விடுப்பு தொகை, நிலுவைத் தொகை போன்ற பணப்பலனுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் கருவூலத்துக்கு அனுப்பி னால் தான் மாத இறுதி வேலை நாளில் ஊதியம் பெற முடியும்.

பட்ஜெட் நிதி ஒதுக்காததால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர் களுக்கான ஊதியப் பட்டியல் இதுவரை கருவூலத்துக்கு அனுப்பவில்லை. இதனால் இம்மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பட்ஜெட் நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இம்மாத ஊதியம் குறித்த காலத்தில் பெற முடியாத நிலை உள்ளது. விரைந்து நிதியை ஒதுக்கி ஊதியம், பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog