NEET நுழைவுத் தேர்வு நிறைவு - சுலபமா, கடினமா ? மாணவர்கள் கருத்து NEET Entrance Exam Concludes – Easy or Difficult? Students' Reactions
நாடு முழுவதும் நடைபெற்று வந்த 2026-27-ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவுபெற்றது.
நாடு முழுவதும் 22.80 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் 552 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 43 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில் 2026 - 27 ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
நீட் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தங்களின் அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.
அதில், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாகவே இருந்ததாகவும், ஆனால், முழுவதும் எளிமை என்று கூற முடியது என்றும் குறிப்பிட்டனர்.
குறிப்பாக வேதியியல், இயற்பியல் கடினமாக இருந்ததாகவும், விலங்கியல் எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 552 நகரங்கள் மட்டுமின்றி துபை, அபுதாபி, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் 5,000 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்
Tuesday, May 05, 2026
NEET நுழைவுத் தேர்வு நிறைவு - சுலபமா, கடினமா ? மாணவர்கள் கருத்து
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.