அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பு நாளை தொடக்கம்: பழைய கல்வி கட்டணத்தையே பெற உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 30, 2020

அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பு நாளை தொடக்கம்: பழைய கல்வி கட்டணத்தையே பெற உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரும் 31-ம் தேதி முதல் தொடங்கவேண்டும் என்றும், பழைய கல்வி கட்டணத்தையே பெறவேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர்சேர்க்கைக்கு ஆன்லைனில் 3.12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். சுற்றறிக்கை இதைத் தொடர்ந்து கல்லூரிகள் அளவிலான மாணவர் சேர்க்கை ஆக. 28 முதல் செப். 4-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன்அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அரசு கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தும் விதமாகவும், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும் மாணவர் சேர்க்கைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண் டும். ஆக.31 முதல் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும். அதேபோல்,மாணவர் சேர்க்கையின் விவரங்களை பாடவாரியாக கல்லூரிமுதல்வர்கள், மண்டல இணை இயக்குநர்களுக்கு ஒவ்வொரு நாளும் தெரிவிக்க வேண்டும். மேலும், இணை இயக்குநர்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான உரிய அறிவுரைகளை அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் வழங்கி, மாணவர்கள் குறித்த எண்ணிக்கையை ஒருங்கிணைத்து இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மாணவர்களிடம் இருந்து கடந்த கல்வி ஆண்டில் பெறப்பட்ட கல்விக் கட்டணத்தையே நடப்பு ஆண்டிலும் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews