தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது. 7வது கட்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவிர, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், எளிதாக வேலைக்கு சென்று வர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் பெரிய அளவில் தளர்வுகள் இருக்காது என்றே கூறப்படுகிறது. அதேநேரம் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை முடிந்ததும், இன்று பிற்பகல் 29 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதேபோன்று கூடுதல் தளர்வுகள் அறிவிப்பதால் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவை தமிழக அரசு எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இன்று மாலை அல்லது நாளை, தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா, கூடுதலாக என்னென்ன தளர்வுகள் என்பது குறித்தும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews