உயர்கல்வி ஊக்க ஊதியம் தர மறுப்பு: முதல்வர் தனிப்பிரிவு தெரிவித்தும் அலைக்கழிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 23, 2020

உயர்கல்வி ஊக்க ஊதியம் தர மறுப்பு: முதல்வர் தனிப்பிரிவு தெரிவித்தும் அலைக்கழிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமைச்சு பணியாளர்களுக்கான அரசாணையை காட்டி, ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.அரசுத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களின் கல்வித்தகுதியை அதிகரித்து கொள்ள, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பட்டதாரிகள் அதிகளவில், அரசுப்பணியில் இருப்பதால், ஊக்க ஊதியம் வழங்க தடை விதித்து, கடந்த மார்ச் மாதம், அரசாணை (எண்: 37) வெளியிடப்பட்டது.இதில், ஆசிரியர்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. ஆனால், இந்த அரசாணையை காட்டி, ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை மறுக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறுகையில், ''கிணத்துக்கடவு உதவி கருவூலத்துறை அலுவலர், அரசாணை எண் 37ஐ காரணம் காட்டி, ஊக்கத்தொகை வழங்க மறுத்து, எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். முதல்வர் தனிப்பிரிவில் இதுகுறித்து விளக்கம் பெறப்பட்டது. இதில், ஊக்கத்தொகை தடை விதித்த அரசாணை, ஆசிரியர்களுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் ஒப்புதல் அளித்தும், கருவூலத்துறையில் ஊக்கத்தொகை வழங்க மறுக்கின்றனர். இனியாவது ஆசிரியர்களை அலைக்கழிக்காமல், விண்ணப்பித்தோருக்கு ஊக்கத்தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும்,'' என்றார்.ஊக்கத்தொகை தடை விதித்த அரசாணை, ஆசிரியர்களுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் ஒப்புதல் அளித்தும், கருவூலத்துறையில் ஊக்கத்தொகை வழங்க மறுக்கின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews