ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை
அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை - தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனத் தகவல்..
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 3-ம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும், கல்வி நிறுவனங்கள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடப்பாண்டு கல்வி நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்படலாம் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனத் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups




No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.