மத்திய அரசு பணிகள், கல்விக்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வருமான, சொத்து சான்று - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 11, 2020

Comments:0

மத்திய அரசு பணிகள், கல்விக்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வருமான, சொத்து சான்று

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினர் மத்திய அரசு பணி மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற வருமான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற அந்தந்த தாசில்தார்களிடம் வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருமானம் மற்றும் சொத்து மதிப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று தாசில்தார்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இது தொடர்பாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகள், மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டுக்கான வருவாய் மற்றும் சொத்து சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என்ற ஜூன் 4ம் தேதி சுற்றறிக்கை திரும்ப பெறப்படுகிறது. இந்த சான்றிதழ்களை வழங்கும்போது அதில் மத்திய அரசு பணிகள், மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான சான்று என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 'மத்திய அரசு பணி மற்றும் கல்வி தேவைகளுக்கு மட்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமான சான்றிதழ் வழங்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப் பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.இதன்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இட ஒதுக்கீடு பெற, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் பெற வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்குள் பெறுவோர், பொருளாதாரத்தின் பின்தங்கியோருக்கான, இட ஒதுக்கீட்டை பெற தகுதியுடையவர்கள். அதன்படி, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.கடந்த மாதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க, தமிழக அரசு தடை விதித்தது. இதனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள், மத்திய அரசின் சலுகையை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் பழைய முறைப்படி, சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என, பல்வேறு சமூகத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் கல்வி மற்றும் அரசு பணிகளில் சேர மட்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, பொதுப் பிரிவினருக்கு, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமான சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற உத்தரவு, திரும்ப பெறப்படுகிறது. அவர்களுக்கு சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். இந்த சான்றிதழ்களை, மத்திய அரசு பணியில் சேரவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேரவும் மட்டும் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews