தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, கல்வி செலவு தொகை எப்படி குறைந்தது என்பதற்கு, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி கட்டணம்தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு ஏற்க வேண்டும்.கடந்த, 2016 - 17ல், ஒரு மாணவருக்கான கல்வி செலவு தொகை, 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதுவே, அடுத்த கல்வியாண்டில், 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. பள்ளி கல்விக்கான பட்ஜெட்டாக, தமிழக அரசு, 28 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குகிறது.
அதன்படி, ஒரு மாணவனுக்கு, 32 ஆயிரம் ரூபாய், அரசு செலவு செய்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கான செலவு தொகையை, அரசு குறைத்துள்ளதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 25 சதவீத இடங்களில் சேரும், மாணவர்களுக்கான கல்வி செலவை, சரியாக கணக்கிட வேண்டும்.மீதி தொகைஎனவே, 2017 முதல், 2019 வரைக்கான, மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை, மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். மாணவர்கள் சேர்ந்த பின், ஜூன் மாதத்தில், 50 சதவீதம்; டிசம்பரில், 25 சதவீதம்; மீதி தொகையை ஏப்ரலில், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன் ஆஜரானார். மாணவர்களுக்கான கல்வி செலவு தொகை, எப்படி குறைந்தது என்பதற்கு, அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 13ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.