ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 15, 2020

Comments:0

ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் ஜூலை 1-ந் தேதி முதல் 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கல்வியாண்டு நாட்டில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலானவை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஜூன் 15-ந் தேதி முதல் (அதாவது நேற்று முதல்) புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்து இருந்தது. இதன்படி பல தனியார் பள்ளிகள் இ-கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளன. இந்த நிலையில் சிவப்பு மண்டலம் அல்லாத (கொரோனா பாதிப்பு குறைந்த) பகுதிகளில் 9, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இதேபோல 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சில பகுதிகளில் பள்ளிகளை திறக்க முடியவில்லை என்றாலும், மாணவர்களுக்கான கற்பித்தல் செயல்முறையை நிறுத்த முடியாது. மாணவர்களை பாடங்கள் சென்றடைய டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், முதல் மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கற்பித்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மற்ற வகுப்புகளுக்கு சில மணி நேரங்கள் ஆன்லைனில் பாடம் நடத்த அரசாங்கம் அதற்கான நேரத்தை வரையறுத்துள்ளது. அகில இந்திய வானொலி அலைவரிசையை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சென்றடைய முயற்சி செய்து வருகிறோம். சில பாடங்களை ஒளிபரப்பு செய்ய முடியும் என்றார். இந்த நிலையில், பள்ளிகளை ஆகஸ்டு மாதமே திறக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே தொற்று குறைவான இடங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் பள்ளிகள் தொடங்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், ''நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே தொற்று குறைவான இடங்களில் 9, 10 மற்றும் 12-ம் வகுப்புகளை ஜூலை 1 முதல் தொடங்கலாம். அதே நேரத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வகுப்புகள் தொடங்கும். எனினும், பள்ளிகளைத் திறக்கமுடியாத பகுதிகளில் கற்பித்தல் நிறுத்தப்படக் கூடாது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கற்பித்தல் நிகழ்த்தப்பட வேண்டும். 1 மற்றும் 2-ம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் மற்ற மாணவர்களுக்கு அரசு வரையறுத்துள்ள நேர அட்டவணையின்படி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் அனைத்து வகுப்புகளும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தொடங்கப்படவேண்டும் என்று சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews