10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போதைய சூழ்நிலையில் நடத்தினால் கொரானா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 19, 2020

Comments:0

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போதைய சூழ்நிலையில் நடத்தினால் கொரானா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் மார்ச் முதல் வாரத்துக்கு பின்பு கொரோனா அறிகுறி தென்பட்டது மார்ச் -24 முதல்‌ கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா நோயின் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்த நூறு ஆண்டுகளில் கண்டிராத பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பொது மக்கள் பெற்றோர்கள், மாணவர்கள் மனநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வேலைக்கு உணவின்றி பல ஏழை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் மே -17 முதல் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு 12 மாவட்டங்களுக்கு முழுமையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களிலும் மாவட்டத்தை விட்டு மாவட்டம் வெளியில் செல்ல அனுமதி கிடையாது அவ்வாறு சென்றால் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களாக எந்த வித வருமானம் இல்லாமல் வீட்டில் இருந்தால் அடுத்த வேளை உணவுக்கு கூட வேதனைப்பட்டு வரும் நிலையில் பொது போக்குவரத்தும் இல்லாத இந்த காலகட்டத்தில் தமிழக அரசு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்தினால் பல ஆயிரங்களை செலவு செய்து ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வாகனங்களை வைத்து இடம் மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவர் அரசு பேருந்துகள் இன்னும் சரிவர அனைத்து கிராமங்களில் முழுமையாக இயங்கவில்லை.அவர்களுக்கு தனியாக பேருந்து வசதி செய்து தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொது போக்குவரத்து அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கும், பெற்றோர்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தால் நினைத்துப் பார்த்து முடியாத அளவிற்கு தொற்றுக்கள் மிக வேகமாகப் பரவிவிடும்.
தற்போது நாடு முழுவதும் புலம் பெயர்ந்து தொழிலாளர்களால் தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று உச்சகட்டமாக உயர்ந்து இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது தற்போது 10 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வித்துறை பணியாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடும் பொழுது கொரோனா நோயின் தாண்டவம் உச்சக்கட்டத்தை எட்டும் இதில் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டாலும் அதை தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிடும் எனவே கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த பின்பு பள்ளிகளை ஒரிரு வாரங்கள் நடத்தி மாணவர்களை மனரீதியாக தயார் செய்த பின்பு பத்தாம் வகுப்பு மற்றும் நடத்தி முடிக்கப்படாத மற்ற தேர்வுகளை நடத்திட வேண்டுமாய் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜே.ராபர்ட், மாநில பொதுச்செயலாளர், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்&, 2009&TET போராட்டக்குழு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews