10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க ஐகோர்ட்டில் வழக்கறிஞர் வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 14, 2020

Comments:0

10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க ஐகோர்ட்டில் வழக்கறிஞர் வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 1 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ௧ வகுப்பில் சில பாடங்களுக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொது தேர்வை எழுதுவர். பள்ளிகளில், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம். மாணவர்களுக்கு வயது முதிர்ச்சி கிடையாது. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால், வைரஸ் தொற்று அதிகரிக்கும்.
வைரஸ் தொற்றால், பல பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஏற்கனவே கஷ்டமான சூழ்நிலையில் இருப்பர். அவர்களால் தொடர்ந்து படித்து, தேர்வு எழுதுவது கடினம். பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். பஸ்கள் இயக்கப்பட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலே இருக்கும். சி.பி.எஸ்.இ., தேர்வு கூட, ஜூலை, 1ல் தான் துவங்குகிறது. வைரஸ் தொற்றே இல்லை என்ற, நிலை உருவான பின், பொது தேர்வை நடத்தக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். எனவே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது உள்ள சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை தொடர்ந்துள்ளார். மாணவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடினம் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்போது தேர்வை நடத்தலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது உள்ள சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை தொடர்ந்துள்ளார். மாணவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடினம் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்போது தேர்வை நடத்தலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னைசூளைமேட்டை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர், தொடர்ந்துள்ள வழக்கில்,‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. இதுவரை 61 பேர் இந்த வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். 8 ஆயிரத்து 718 பேர்
வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், வைரஸ் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஏற்கனவே, தமிழகத்தில் 200 குழந்தைகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால், கொரோனா வைரஸ் தொற்று மாணவர்களிடையே பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை வருகிற ஜூன் 1- ந்தேதி நடத்த தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews