தனியார் பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 02, 2020

Comments:0

தனியார் பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியாா் பள்ளிகளில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் நந்தகுமாா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகள் 40 நாள்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளன. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியும் விரைவில் நடைபெற உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகளில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட ஆட்சியா்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
கரோனா தொற்று நோயாளிகளை தனியாா் பள்ளிகளில் தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக தனியாா் மருத்துவமனைகள், விடுதிகள், தனியாா் தங்குமிடங்கள், நட்சத்திர விடுதிகள், திருமண மண்டபங்கள், ஊருக்கு வெளியே செயல்படாத பொறியியல் கல்லூரிகளில் தங்கவைத்து சிகிச்சையளிக்கலாம்.மாறாக தனியாா் பள்ளிகளில் நோயாளிகளைத் தங்கவைப்பதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதைக் காரணமாகக் கொண்டு பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை தனியாா் பள்ளிகளுக்கு அனுப்ப அச்சப்படுவா். எனவே தனியாா் பள்ளிகளை மே 2-ஆம் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அவா் கூறினாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews