நாளை முதல் இந்த இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்வு.. சென்னை மாநகராட்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

Comments:0

நாளை முதல் இந்த இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்வு.. சென்னை மாநகராட்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் தான் அதிகம் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்ததால் தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு பகுதிகள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, மண்டலம் 5-ல் மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, மண்டலம் 9-ல் வரதராஜன்பேட்டை (சூளைமேடு), மண்டலம் 10-ல் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை). மண்டலம் 13-ல் எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்). மண்டலம் 14-ல் நேரு தெரு (பெருங்குடி), மண்டலம் 15-ல் எம்.ஜி.ஆர் நகர், பனையூர் ஆகிய பகுதிகளில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் நாளை முதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews