34 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரிசி வழங்கிய ஆசிரியை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 26, 2020

Comments:0

34 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரிசி வழங்கிய ஆசிரியை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலர், கூலி தொழிலாளர்களாக உள்ள நிலையில், ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்பட்டதால், அரசு பள்ளி ஆசிரியை, 34 குடும்பத்தினருக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். சேலம், நெத்திமேடு, ஜோதிபாசு மனைவி ரேவதி, 39; ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. இவரிடம் படிக்கும், 34 மாணவ - மாணவியரின் பெற்றோர், கட்டட, வெள்ளி நகைத் தொழிலாளியாக உள்ளனர்.
நன்றி ஊரடங்கால், அவர்கள் வேலைவாய்ப்பை இழந்ததால், தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு வழங்க முடியாமல் தவித்தனர். இதையறிந்த ஆசிரியை ரேவதி, தலா, 10 கிலோ அரிசி, முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை, கணவர் ஜோதிபாசுவின் துணையுடன், ஒவ்வொரு மாணவரின் வீடுகளுக்கும் சென்று வழங்கினார்.அனைவரும் ஆசிரியைக்கு நன்றி தெரிவித்தனர். இது குறித்து, ஆசிரியை கூறியதாவது:என்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலர், கூலி தொழிலாளர்கள். சில மாணவர்களுக்கு தந்தையும் இல்லாததால், அவர்களின் தாயார் வேலைக்கு சென்று சாப்பாடு வழங்கி வருகின்றனர்.
குடும்ப சூழல் மாணவர்களின் குடும்ப சூழலை அறிந்திருந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு, முதல் கட்டமாக அரிசி வழங்கினேன். கணவர், அவரது பங்காக, ஏழை தொழிலாளிகள், பிற வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அரிசி வழங்கினார். இந்த மாதத்துக்கு மட்டுமின்றி, ஊரடங்கு தொடரும் வரை, என்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்குவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews