👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பின் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தேதி குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 4ம் தேதியன்று முடிவுசெய்யப்படும் என மத்திய மனிதவளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கல்வித்துறையும் முடங்கியுள்ளது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
மேலும், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்துவது, நடந்து முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்குவது என்பது உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.