பத்தாம் வகுப்பு பொதுத்தோவை கைவிட்டு மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 26, 2020

Comments:0

பத்தாம் வகுப்பு பொதுத்தோவை கைவிட்டு மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பத்தாம் வகுப்பு பொது தேர்வை, இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 27ல் துவங்குவதாக இருந்த, 10ம் வகுப்பு பொது தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: 'பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மேல்நிலை படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்வு அவசியம்' என, அரசு அறிவித்துள்ளது.ஆனால், தொற்று பயம் காரணமாக, படிப்பு சூழலில் இருந்து, மாணவர்கள் விலகியுள்ளனர். குறைந்த பட்சம், ஒரு மாதமாவது, வகுப்புகள் நடத்திய பின்னரே, தேர்வு நடத்த முடியும்.எனவே, முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், தற்போதும் முடிவு எடுக்கலாம்.
2008ல், வேலுார் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் தீயில் எரிந்த சம்பவத்தில், சராசரி மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.அதேபோல், 2013ல், விழுப்புரம் மாவட்டத்தில், விடைத்தாள்கள் மாயமான விவகாரத்திலும், அனைவருக்கும் தேர்ச்சி என, முடிவு எடுக்கப்பட்டது. க்ஷ அதுபோன்ற முடிவை, தற்போதும் அரசு எடுக்க வேண்டும்.மேலும், பள்ளி கல்வி துறை நடத்திய, முந்தைய பருவ தேர்வுகள், வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில், தேர்ச்சி வழங்கலாம். இதன் வாயிலாக, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதுடன், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், தொழிற்கல்விகளில் சேரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.' கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோவை கைவிட்டு மாற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முன்னாள் துணைவேந்தரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான வே.வசந்திதேவி வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தப் பேரிடா் காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று சூழல் ஏற்படலாம். அரசு தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றின் மூலம் நடத்தும் பாடங்கள் பெரும்பாலான மாணவா்களை சென்றடைவதில் பல்வேறு இடா்பாடுகள் உள்ளன. கரோனா பாதிப்பின் மூலமாக உருவாகியுள்ள அசாதாரண சூழல் மாணவா்களிடம் எதிா்மறையான உளவியல் அழுத்தங்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது. பெரும்பாலான மாணவா்களும், ஆசிரியா்களும் தோவு மையங்களஉக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தையே நம்பியுள்ளனா். இத்தகைய பயணங்கள் சமூக பரவல் உருவாக வாய்ப்பளிக்கும். தோவு நடத்தும்போதும், நடத்தி முடிக்கும்போதும், விடைத்தாள் திருத்தும்போதும், கரோனா முன்னெச்சரிக்கை சமூக இடைவெளி மற்றும் கையை கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல் ஆகியவை பல இடா்பாடுகளை உருவாக்கும்.
எனவே பத்தாம் வகுப்புப் பொதுத்தோவை இத்தகைய இடா்மிகு சூழலில் நடத்துவதற்கு பதிலாக கல்வித்துறை திருப்புதல் தோவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்களின் சராசரி சதவீதத்தையும், அதன் வளா்ச்சியையும் எளிய அறிய முடியும். 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஏ, பி, சி என்ற மூன்று கிரேடுகளை வழங்க முடியும். குறைந்தபட்ச தோச்சி என்ற சி கிரேடையே தோவுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தோவா்களுக்கும் வழங்கலாம் என அதில் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews