👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையைப் பொறுத்தவரையில் முக்கிய தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசு சார்பிலும், கல்வி நிறுவனங்களின் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன. மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரவேற்க்கத்தக்கது என்றாலும், 43 சதவீத மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், இன்டெர்நெட் போன்ற வசதிகள் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இது தொடர்பாக ஆன்லைன் நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது. சுமார் 25 ஆயிரம் மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன் முடிவில் வெறும் 57 சதவீத மாணவர்களிடம் மட்டுமே ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள, தேவையான கம்ப்யூட்டர், வைஃபை, இன்டர்நெட், பிரிண்டர் உள்ளிட்ட வசதிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மீதம் உள்ள 43 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்கான முழு வசதிகள் இல்லை. அதாவது, 5 ல் 2 பேருக்கு ஆன்லைன் வசதி முழுமையாக கிடைக்கவில்லை. சிலருக்கு கம்ப்யூட்டர் உள்ளது ஆனால், இன்டர்நெட் இல்லை. அதே போல், ஒரு சிலருக்கு மொபைல் இன்டர்நெட் இருந்தாலும், நல்ல நிலையில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர் இல்லை.
மேலும், சில பெற்றோர்கள் வீட்டிலிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர் மூலமாக வேலை செய்கின்றனர். அவர்கள், தங்களின் பிள்ளைகளின் படிப்புக்காக தங்களுடைய அலுவலக லேப்டாப்,கம்ப்யூட்டரை கொடுத்து வேறு வழியில்லாமல் சமாளித்த வருகின்றனர்.
ஏப்ரல் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைகிறது. அதன் பிறகாவது நிலைமை கட்டுக்குள் வருமா, நிம்மதி கிடைக்குமா என்றே மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.