ஆராய்ச்சி திறனை மேம்படுத்த பல்கலைகளுக்கு ரூ.210 கோடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 14, 2020

Comments:0

ஆராய்ச்சி திறனை மேம்படுத்த பல்கலைகளுக்கு ரூ.210 கோடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடங்கள் கட்ட, உபகரணங்கள் வாங்க, 150 கோடி ரூபாய் வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ், உயர் கல்வித் துறையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் உள்ள, 10 அரசு பொறியியல் கல்லுாரிகள், 45 அரசு பாலிடெக்னிக்களில் உள்ள கட்டடங்களை மேம்படுத்தவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், முதல் கட்டமாக, இந்த ஆண்டு, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும், 10 ஆயிரம் மாணவர்கள், தொழிற்சாலைகளில் கள அனுபவம் பெற்று, தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த வேண்டும்.
அதற்காக, தலா ஒரு மாணவருக்கு, 16 ஆயிரத்து, 600 ரூபாய் நிதியுதவி வழங்க, 16.60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், உயர் மின் அழுத்த பகிர்மான அமைப்பை, சிறப்பான முறையில் இயக்கி பராமரிக்க, 6.33 கோடி ரூபாய் செலவில், 61 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, கல்வி யியல் மேம்பாட்டு நிறுவன கட்டடம், 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் தொன்மை மாறாமல், 10.20 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும் சென்னை, மாநில கல்லுாரியில், பழமை வாய்ந்த கட்டடங்கள், கல்லுாரி முதல்வர் குடியிருப்பு, தொன்மை மற்றும் அழகு மாறாமல், 10 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப் படும்
மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, சென்னை, அண்ணா பல்கலையில், மின் வாகனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி... சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி; திருச்சி, பாரதி தாசன் பல்கலையில், சுகாதாரம் மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சி.மேலும், கோவை, பாரதியார் பல்கலையில், புற்றுநோய் ஆராய்ச்சி; மதுரை காமராஜர் பல்கலையில், உயிர் மருத்துவம் ஆராய்ச்சி... சென்னை பல்கலையில், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள, தலா, 35 கோடி ரூபாய் வீதம், 210 கோடி ரூபாய் வழங்கப்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடங்கள் கட்ட, கணினி மற்றும் உபகரணங்கள் வாங்க, 150 கோடி ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews