Breaking

Saturday, March 14, 2020

பெற்றோர் வெளிநாட்டு பயணமா? பிள்ளைகள் பள்ளிக்கு வரத்தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெற்றோர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி இருந்தால், அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு வரவேண்டாம்' என, எச்சரிக்கப் பட்டுள்ளனர். சீனாவில் இருந்து பரவிய, கொரோனா வைரஸ், உலகம் முழுவதும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.பள்ளிகளில் மாணவர்களுக்கு, கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சில பள்ளிகள், நிர்வாக ரீதியாக சில முடிவுகளை எடுத்து, பெற்றோருக்கு, 'இ - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வழியாக தகவல்கள் அனுப்பி வருகின்றன.இதில், கடும் காய்ச்சல், இருமல் பிரச்னை என, உடல் நலக்குறைவு உள்ளவர்கள்; பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளுக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog