'குரூப் - 2' தேர்வில் தவறு நடக்கவில்லை; TNPSC விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 09, 2020

Comments:0

'குரூப் - 2' தேர்வில் தவறு நடக்கவில்லை; TNPSC விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப் - 2 தேர்வில், தவறு ஏதும் நடக்கவில்லை' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீபத்தில், குரூப் - 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 1997ல் பிறந்தவர்கள், அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது, சந்தேகத்திற்குரியதாக உள்ளது என, செய்திகள் ெவளியாகின. இது குறித்து, தேர்வாணையம் ஆய்வு செய்ததில், தவறு எதுவும் நடக்கவில்லை என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, அடுத்த வாரம் தொகுதி இரண்டுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்று, தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிந்ததும், தேர்வர்களின் முழு விபரமும், தேர்வாணைய இணையதளத்தில் ெவளியிடப்படும்.அதேபோல், ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான, இளநிலை கட்டடக் கலைஞர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட, 39 பேரில், சென்னை மையத்திலிருந்து மட்டும், 31 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதில் தவறு நடந்திருக்கலாம் எனவும், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து ஆய்வு நடத்தியதில், தவறு நடக்கவில்லை என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது; 31 பேரும் வெவ்வேறு தேர்வுக்கூடங்களில், தேர்வு எழுதி உள்ளனர். இப்பணிகளுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. தேர்வு நடவடிக்கை முழுமையாக முடிந்ததும், தேர்வர்களின் முழு விபரங்களும், இணையதளத்தில் ெவளியிடப்படும்.யூகங்கள் அடிப்படையிலான செய்திகளால், நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகி, நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீது, தேர்வாணையம் தன் கண்டனத்தை பதிவு செய்கிறது.தகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் புகார்கள் மீது, தேர்வாணையம் உடனடி யாக ஆய்வு செய்யும். தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்க, உறுதுணையாக இருந்து வருகிறது. இனிவரும் காலங்களிலும், தேர்வாணையத்தின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இருக்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
குரூப்-2, ஜூனியர் ஆர்கிடெக் தேர்வுகளில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்வாணையம் அண்மையில் முடிவுகள் வெளியிட்ட குரூப்-2 தேர்வில், 1997ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்துக்குரியதாக உள்ளது என்று சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்துள்ளது போன்று அடுத்த வாரம் குரூப்-2க்கான கலந்தாய்வு நிறைவு பெற்று தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்ற உடன் தேர்வர்களின் முழு விபரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுபோலவே அண்மையில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் இளநிலை கட்டடக் கலைஞர்( ஜூனியர் ஆர்கிடெக்) பணிக்கான நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட 39 தெரிவர்களில் சென்னை மையத்திலிருந்து மட்டும் 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எனவே இதில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாகவும் தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட 31 தேர்வர்களும் மூன்று வெவ்வேறு தேர்வுக்கூடங்களில் 21 வெவ்வேறு அறைகளில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களும் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான கலந்தாய்வு இன்று(நேற்று) நிறைவுற்ற நிலையில் தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்ற உடன் தேர்வர்களின் முழு விபரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இதுபோன்ற ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளால் நல்ல முறையில் தேர்விற்கு தங்களை தயார் செய்து தேர்வில் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews