131 பணிகளுக்கு நேரடி தேர்வு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 10, 2020

Comments:0

131 பணிகளுக்கு நேரடி தேர்வு அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், 131 பணியிடங்கள், நேரடி தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு, வரும், 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.எம்.டி.ஏ.,வில், அமைச்சு மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் உள்ளன. இதில், 171 பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வு, 2015ல் அறிவிக்கப்பட்டது. நிர்வாக குளறுபடிகள் காரணமாக, இதில், பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதற்கான அறிவிக்கையை ரத்து செய்ய போவதாக, சி.எம்.டி.ஏ., நிர்வாகம், நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனாலும், அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், இளநிலை உதவியாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர், தட்டச்சர், களப் பணியாளர், செய்தியாளர் ஆகிய நிலைகளில், 131 பணியிடங்களை நிரப்ப, சி.எம்.டி.ஏ., முடிவெடுத்து உள்ளது. இதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.வரும், 24 வரை, விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, 2015ல், இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கலாமா; அவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், 131 பணியிடங்கள், நேரடி தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு, பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ.,வில், அமைச்சு மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் உள்ளன. இதில் 171 பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வு 2015ல் அறிவிக்கப்பட்டது. நிர்வாக குளறுபடிகள் காரணமாக இதில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதற்கான அறிவிக்கையை ரத்து செய்ய போவதாக, சி.எம்.டி.ஏ., நிர்வாகம், நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாவில்லை. இந்நிலையில், இளநிலை உதவியாளர், மூன்றாம் நிலை சுருக் கெழுத்தர், தட்டச்சர், களப் பணியாளர், செய்தியாளர் ஆகிய நிலைகளில், 131 பணியிடங்களை நிரப்ப, சி.எம்.டி.ஏ., முடிவெடுத்துள்ளது. இதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சி.எம்.டி.ஏ., இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பிப். 24 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே 2015ல் இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாமா; அவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews