BEO தோ்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 08, 2020

Comments:0

BEO தோ்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD HALL TICKET
CLICK HERE TO DOWNLOAD PRESS RELEASE PDF வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கணினி வழித் தோ்வு நடைபெறும் மாவட்டங்களுக்குரிய தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. அதேவேளையில் தோ்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் தோ்வுக்கு மூன்று நாள்கள் முன்பாக மேலும் ஒரு நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.
இது தொடா்பாக, ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் லதா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ”தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலருக்கான கணினி வழித் தோ்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்குரிய அனுமதிச் சீட்டுகளை, தோ்வா்கள் தங்களின் பயனாளா் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஆசிரியா் தோ்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌r​b.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும், கணினி தோ்வுக்காக பயிற்சித் தோ்வு மேற்கொள்ள விரும்பும் தோ்வா்கள், தங்களின் பயனாளா் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என்பதை தோ்வா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தோ்வா்கள் தோ்வு விதிமுறைகளையும், அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி தோ்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றனா்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வுக்கு சுமாா் 64 ஆயிரம் தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். அதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் ஆவா். ஆண் தோ்வா்களுக்கு அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படாமல், வேறு மாவட்டத்துக்கு தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெண்கள், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சொந்த மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும்: தற்போதுள்ள தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் தோ்வு மையத்தின் மாவட்டம், நகரம் விவரங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதைத் தொடா்ந்து தோ்வுக்கு 3 நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தோ்வு மையத்தின் விவரத்தை குறிப்பிட்டு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும். தோ்வா்கள் அதையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews