9, 10ம் வகுப்பு மாணவருக்கு 'ஆன்லைன் டெஸ்ட்' இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் அவதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 02, 2020

Comments:0

9, 10ம் வகுப்பு மாணவருக்கு 'ஆன்லைன் டெஸ்ட்' இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் அவதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளில், ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்துவதில், 'சர்வர்' கோளாறு, இணைய வேகமின்மையால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்கள், கணினி வழித்தேர்வில் அனுபவம் பெற, 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொருவருக்கும், தனித்தனியே யூசர் ஐ.டி., - பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு குழுவுக்கு, 10 பேர் வீதம், ஒன்றரை மணி நேர தேர்வெழுத உத்தரவிடப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்தில், இரு நாளாக, தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், 2 எம்.பி., வேகத்தில் மட்டும், இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 10 கணினிகள் பகிர்ந்து கொள்ளும்போது, இணைய சேவையை பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்துவதில், 'சர்வர்' கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதனால், நாள் முழுதும் காத்திருந்தாலும், ஒரு குழு மாணவர்களுக்கு கூட, டெஸ்ட் நடத்த முடிவதில்லை. இதை தவிர்த்து, மற்றவர்களுக்கு திருப்பத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 வகுப்புக்கு, செய்முறை தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைன் டெஸ்ட் எழுத காத்திருப்பதால், மாணவர்கள், ஆசிரியர்களின் நேரம் விரயமாகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்படுகிறது. ஆன்லைன் டெஸ்ட் நடத்த வேண்டும் எனில், முதலில், அதற்கேற்ப வசதி வாய்ப்புகளை உருவாக்கிவிட்டு அறிவிக்க வேண்டும். அரை குறை வசதிகளில், நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதால், மாணவர்கள், ஆசிரியர்கள்தான் அவதிக்குள்ளாகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இணையதள வேகம் குறைவாக இருந்ததால், ஆன்லைன் முறையிலான நாட்டமறிதல் தேர்வில், மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, உயர்கல்வியில் எந்த படிப்பில் ஆர்வமுள்ளது என்பதை அறிய, நாட்டமறிதல் தேர்வு நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இத்தேர்வில் மதிப்பெண் வெளியிடாமல், பாடவாரியாக மாணவர்களின் ஆர்வத்தை அறியும் நோக்கில், ஆன்லைன் முறையில்,தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு, இணையதள வேகம், 5 mbps இருக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், இயக்குனரகத்தில் இருந்து, அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்படும், இண்ட்ராநெட் சேவையில், 2 mbps இணையதள வேகமே உள்ளது. அலுவலக பயன்பாட்டிற்கான, இணையதள வசதியும், குறைந்த வேகம் கொண்டதால், மாதிரி ஆன்லைன் தேர்வு, பள்ளிகளில் நடத்த முடியாத, நிலை நீடித்தது. இதுகுறித்து, இயக்குனரத்திற்கு தகவல் அளித்தும், இணையதள வேகத்தை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று அனைத்து அரசுப்பள்ளிகளிலும், 'ஆப்டிட்யூட்' எனும் நாட்டமறிதல் தேர்வு துவங்கியது.
கோவை மாவட்டத்தில், பல பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே, நேற்றைய தேர்வில் பங்கேற்றனர். இணையதள வேகம் குறைவாக இருந்ததால், 90 நிமிடங்களில், 90 வினாக்களுக்கு விடையளிக்க இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,' இணையதள வேகம் குறைவாக இருந்ததால், பல மாணவர்களால், 40 கேள்விகளுக்கு கூட, 90 நிமிடங்களில் பதில் அளிக்க இயலவில்லை. கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வை கொண்டு, மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அறிவதில் சிக்கல் உள்ளது,' என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews