பாரதிதாசன் பல்கலை நேர்காணல் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2020

Comments:0

பாரதிதாசன் பல்கலை நேர்காணல் ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பாரதிதாசன் பல்கலையில் 28 துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் ஒத்தி வைக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, பாரதிதாசன் பல்கலையில், 28 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, நேர்காணல் அறிவிக்கப்பட்டிருந்தது. டிச., 21 முதல் 25ம் தேதி வரை, உதவி பேராசிரியர்களுக்கும், ஜன. 22, 24 மற்றும் 25ம் தேதிகளில் பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட இருந்தது. பாரதிதாசன் பல்கலையில், ஒட்டுமொத்த பல்கலையும் ஒரே அலகாக கருதப்பட்டு, பணி நியமனத்தில், 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
'ஒவ்வொரு துறையையும், ஒரு அலகாக கருதி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, அனைத்து பிரிவினருக்கும் பணி வாய்ப்பு கிடைக்கும். ஒட்டுமொத்த பல்கலையும் ஒரே அலகாக கருதி, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், பணி நியமனத்தில் குளறுபடிகள் ஏற்படும்' என புகார் எழுந்தது. இதனால், 'பல்கலை அலகு' முறையில் பணி நியமனத்துக்கு, அரசு தரப்பில் ஒப்புதல் கிடைக்கவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால், நேர்காணல் ஒத்தி வைக்கப்படுவதாக, 14ம் தேதியிட்டு, பதிவாளர் பெயரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பணிக்கு நடைபெறுவதாக இருந்த நேர்காணல் ஒத்திவைகப்பட்டதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு விதிகள் மாற்றப்பட்டதை கண்டித்தும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் 09.01.2020 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதற்கு இப்போது பயன் கிடைத்திருக்கிறது! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரும் 22, 24, 25 ஆகிய தேதிகளில் பேராசிரியர்கள் பணிக்கு நடைபெறுவதாக இருந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமூகநீதி காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு முறை மாற்றத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நேர்காணலை ஒத்தி வைத்ததுடன் நிற்காமல் ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, முறையான இடஒதுக்கீட்டு விதிப்படி புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews