தொடக்கப் பள்ளிகளில் புதிதாக 3600 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 01, 2020

Comments:0

தொடக்கப் பள்ளிகளில் புதிதாக 3600 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வரையில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் 3600 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய, அரசு, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என்று தொடக்க கல்வித்துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் வரை தற்காலிகமாக தொகுப்பூதியமாக ரூ.7500 மாத ஊதியத்தில் அமர்த்த தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 3 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். அந்தந்த பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தகுதியுள்ள நபர்கள் நியமிக்கப்பட வேண்டும். இது தற்காலிக பணி மட்டுமே என்று தெரிவித்து நிரப்ப வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் நலன் கருதியே இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் ஏதும் வழங்கக்கூடாது. 3 மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நிரப்பிக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பட்டியல்களை தொடக்க கல்வித்துறைக்கு தொகுத்து அனுப்ப வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிகமாக, தொகுப்பூதிய அடிப்படையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நியமித்துக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 3,624 தமிழ் வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
CLICK HERE TO DOWNLOAD PDF ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து, தகுதியான நபர்கள் பட்டியல் பெறப்படும் வரை, மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு வழியாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், அந்த இடங்களில் ஆசிரியர்களை நிரப்பிக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது.அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, 8.15 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது. இந்த மாதம் முதல் ஏப்ரல் வரை, மூன்று மாதங்களுக்கு மட்டும், ஒப்பந்த அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க, அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews