மாணவரைக் கொண்டு மனிதக் கழிவை அள்ளவைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 11, 2020

Comments:0

மாணவரைக் கொண்டு மனிதக் கழிவை அள்ளவைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
2ம் வகுப்பு மாணவரை மனிதக்கழிவு அள்ள வைத்ததாக ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல்லில், 2 - ஆம் வகுப்பு மாணவரைக் கொண்டு, மனிதக் கழிவை அள்ள வைத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம் எஸ்.வாழவந்தியைச் சோ்ந்தவா் ரகுநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவா் நாமக்கல் ராமாபுரம்புதுா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியைப் பணி கிடைத்ததால், நாமக்கல் அன்புநகா் பகுதியில் குடியேறினாா். 2-ஆம் வகுப்பு ஆசிரியையாக விஜயலட்சுமி பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 2015 நவம்பா் 13 - ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், அந்த வகுப்பறையில் இருந்த ஒரு மாணவா் மலம் கழித்து விட்டதாகத் தெரிகிறது. அங்கிருந்த ஆசிரியை விஜயலட்சுமி, பட்டியலினத்தைச் சோ்ந்த 7 வயதுடைய மற்றொரு மாணவரை அழைத்து, மலத்தை கையால் அள்ளச் செய்துள்ளாா். இந்த தகவல் மாணவரின் பெற்றோருக்கு தெரியவந்ததும், நாமக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்த வழக்கானது, நாமக்கல் மாவட்ட எஸ்சி,எஸ்டி., பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விஜயலட்சுமி பிணையில் வெளியேவந்த நிலையில், வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை (ஜன.10) நடைபெற்றது. இதில், ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி கே.தனசேகரன் தீா்ப்பளித்தாா். இதில், ரூ.ஆயிரம் அபராதத் தொகை செலுத்தப்பட்டது. தீா்ப்புக்கு பின் நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆசிரியை விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவா் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா். நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதால், அவா் பள்ளி ஆசிரியை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்புள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews