பள்ளி மாணவர்களை எழுத்தாளர்களாக உருவாக்க ஆசிரியர்களுக்கு ஆர்வமில்லை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 05, 2020

Comments:0

பள்ளி மாணவர்களை எழுத்தாளர்களாக உருவாக்க ஆசிரியர்களுக்கு ஆர்வமில்லை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எழுத்தாளர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு ஆர்வமில்லை: எழுத்தாளர் பாவண்ணன்: பள்ளி மாணவர்களை எழுத்தாளர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என, எழுத்தாளர் பாவண்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரையில் விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) சார்பில், 2018 ஆம் ஆண்டுக்கான புதுமைபித்தன் நினைவு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆய்வாளருக்கான விருது பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுக்கும், எழுத்தாளருக்கான விருது பாவண்ணனுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் பாவண்ணன் பேசியது: விளக்கு இலக்கிய அமைப்பு கடந்த 23 ஆண்டுகளாக படைப்பாளிகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இதேபோன்று, படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும்போது, சிறந்த படைப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். கடந்த காலங்களில், இலக்கியம் மற்றும் தமிழ் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். அதனால், நல்ல எழுத்தாளர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போதைய காலக் கட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்க ஆசிரியர்கள் இல்லை.
இன்றைய தலைமுறையினரின் படைப்புகள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. அவர்களின் முதல் படைப்பே தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் போல் உள்ளன என்றார். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் பேசியது: என் ஆய்வுப் பணி சிறப்பாக நடைபெற்றதற்கு காரணம், சிறந்த குடும்ப சூழ்நிலைதான். தற்போது, காந்தியத்தை நினைத்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாது. அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு நிலையில் இருப்பவர்கள் இன்று பின்னடைவை அடைந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதில் ஏற்பட்டுள்ள தவறுகளை சரி செய்யவேண்டும் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews