அண்ணா பல்கலை.,யை 2 ஆக பிரிக்க குழு அமைப்பு: அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 18, 2019

Comments:0

அண்ணா பல்கலை.,யை 2 ஆக பிரிக்க குழு அமைப்பு: அரசாணை வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலை.,யை 2 ஆக பிரிப்பது பற்றி முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் அமைச்சர்கள், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாக பிரிப்பதால் இடஒதுக்கீடு பாதிக்காது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே உயர் சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் அது குறித்து இந்த குழு முடிவு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு, 'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' என்ற பெயரில், மேம்பட்ட சீர்மிகு கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த அந்தஸ்துக்கு, சென்னை, ஐ.ஐ.டி., ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமிர்தா கல்வி நிறுவனம் மற்றும், வி.ஐ.டி., கல்வி நிறுவனமும், மேம்பட்ட நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தஸ்துஅந்த வரிசையில், அண்ணா பல்கலைக்கும், இந்த உயரிய அந்தஸ்தை வழங்க, மத்திய அரசு முன்வந்தது.ஆனால், உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டால், அந்த நிறுவனத்தின் அனைத்து செலவுகளையும், மத்திய அரசே ஏற்க வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியது. மேலும், 'கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள், தமிழக அரசுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில், 69 சதவீத இட ஒதுக்கீடு காக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கு மேம்பட்ட அந்தஸ்து வழங்கப்படும் போது, அது தனியாக, தன்னாட்சி பெற்ற மேம்பட்ட கல்லுாரியை போல இயங்க வேண்டும்.நாட்டில் உள்ள மற்ற கல்லுாரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, தேர்வு நடத்துவது, சான்றிதழ் தருவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று, ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்று செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகள் அண்ணா பல்கலையை, வேறு பெயரில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
அரசாணை இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. ஒன்று, மேம்பட்ட நிறுவனமாக, 'அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' என்ற பெயரிலும், மற்றொன்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அந்தஸ்து வழங்கும் அண்ணா பல்கலை என்றும் செயல்பட உள்ளது. அதற்கேற்ற வகையில், தற்போதுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அவற்றுக்கான வளாகங்கள், நிர்வாக முறை போன்றவற்றை, இரண்டு நிறுவனங்களுக்கும் பிரித்து ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்ய, ஆலோசனை குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோரும், அதிகாரிகள் தரப்பில், நிதி துறை, சட்டத்துறை மற்றும் உயர்கல்வி துறை செயலர்கள் இடம் பெறுவர் என, உயர்கல்வி துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews