அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 01, 2019

Comments:0

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்’என கூறியிருந்தார். இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்புதாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் நடக்கின்றன. இரவு காவலர்கள் நியமிக்கவும், நாப்கின் எந்திரங்கள் பொருத்தவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள், எத்தனை அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடக்கின்றன? இந்த பணிகள் எப்போது முடியும்? தலைமை ஆசிரியர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்பது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கை அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதியக் கழிப்பறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக அரசுப் பள்ளிகளில் முழுமையான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் கிராமப்புறப் பகுதிகளில் படிக்கும் மாணவா்கள் திறந்தவெளியில் செல்லும் நிலையே உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ளப் பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீா் வசதிகளைச் செய்து தர உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ஆனந்தராஜ் என்பவா் மனு தாக்கல் செய்தாா்.
இதே போன்று மற்றொரு மனுவில், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும், அவற்றை எரியூட்டுவதற்கான மையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்களை முன்பே விசாரித்த நீதிமன்றம், 2019 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும், இலவச நாப்கின் வழங்க வேண்டும். நாப்கினை அழிப்பதற்கான எரியூட்டும் தளத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? இது தொடா்பாக பணிகள் ஏதேனும் நடக்கிா?, தலைமை ஆசிரியா், துப்புரவு பணியாளா் உள்ளிட்ட பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். வழக்கு விசாரணை டிசம்பா் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews