திப்பு சுல்தான் விவகாரம்; பாடக் குழு அறிக்கையின்படி முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

திப்பு சுல்தான் விவகாரம்; பாடக் குழு அறிக்கையின்படி முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாடப் புத்தகக் குழு அளிக்கும் அறிக்கையின்படி, திப்பு சுல்தானின் பாடம் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். முன்னதாக மடிக்கெரி எம்எல்ஏவும் பாஜக தலைவருமான அப்பச்சு ரஞ்சன், கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ''திப்பு ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டார். ஆனால் வரலாறு, தவறான தகவல்களுடன் எழுதப்படக் கூடாது. அவர் குடகு, மங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்துள்ளார். இதற்குக் காரணம் எல்லை விஸ்தரிப்பே. மக்களை தனது மதத்துக்கு மதமாற்றம் செய்யவே திப்பு சுல்தான் இங்கு வந்தார். தன்னுடைய ஆட்சிப்பரப்பை அதிகரிக்கவும் அவர் முயற்சித்தார். திப்புவுக்கு கன்னட மொழி மீது எந்த மரியாதையும் இல்லை. அவரின் நிர்வாக மொழி பெர்ஷியனாக இருந்தது.
அவர், மடிக்கெரி என்ற ஊரை ஜஃபராபாத் என்றும் மங்களூருவை ஜலாலாபாத் என்றும் பெயர் மாற்றம் செய்தார். இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்தார். கிறிஸ்துவ தேவாலயங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. குடகில், 30 ஆயிரம் குடவர்கள் அவரால் மத மாற்றம் செய்யப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு, நடுநிலைப் பள்ளி வரலாறுப் புத்தகங்களில் பாடமாக உள்ளது. இதுகுறித்து எம்எல்ஏ ரஞ்சன் ஆட்சேபம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். இது ஊடகங்களிடையே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில பாடப்புத்தகக் குழுவிடம் கர்நாடக அரசு அறிக்கை கோரியுள்ளது. இந்நிலையில் இதுபற்றிப் பேசியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ''திப்பு சுல்தான் குறித்த பாடத்தைப் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து எந்தக் குழப்பமும் இல்லை. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். குழுவின் அறிக்கைப்படி, முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் பாஜக அரசின் முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார் எடியூரப்பா. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார்'', திப்பு சுல்தானின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குடகு மக்கள். இதுகுறித்து மூத்த பாஜக எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews