ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு,..பணியிட மாறுதல் கவுன்சலிங் உடனே கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2019

Comments:0

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு,..பணியிட மாறுதல் கவுன்சலிங் உடனே கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் இதுவரை நடக்கவில்லை. இதனால் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றுக்கு மே மாதத்தில் கவுன்சலிங்கை நடத்தும். அதற்கு பிறகு ஜூன் மாதத்தில் ஆசிரியர்கள் பணியேற்பார்கள். அதனால் வகுப்புகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் கற்றல் கற்பித்தல் பணி தடையில்லாமல் நடந்தது. இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தடைபட்டுள்ளது. ஆசிரியர்கள் கடந்த ஆண்டு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பிறகு, ஆசிரியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக பணி நிரவல் என்ற பெயரில் பணி மூப்பு பெற்ற ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்கின்றனர். பதவி உயர்வு வழங்குவதிலும், பணி மூப்பு பெற்றவர் இருக்க இளைவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் மவுனமாக இருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், பணியிட மாறுதல் கவுன்சலிங்கை நிறுத்தி வைத்துள்ளதாக கருதவேண்டி இருக்கிறது. இதன் காரணமாக, போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கல்வி அதிகாரிகள் உணர்ந்தார்களா இல்லையா என்பது புரியாமலே உள்ளது.
குறிப்பாக அரசின் தவறான முடிவால், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருந்தால் மட்டுமே இடமாறுதல் வழங்குவது என்பதில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் காரணமாக கவுன்சலிங் நடக்காமலே காலாண்டுத் தேர்வும் முடிந்துவிட்டது. போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவுன்சலிங் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து இறுதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணி நிரவல் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆண்டு என்ற விதிமுறையை தளர்த்தி 2019-20ம் ஆண்டு கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருதி பணியிட மாறுதல் கவுன்சலிங், பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கடந்த காலங்களில் ஆசிரியா் இடமாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான பொதுக் கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும். இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியா்கள் ஜூன் மாதத்தில் புதிய பள்ளியில் பணியேற்பாா்கள். இதனால் கற்றல்-கற்பித்தல் பணி, தடையின்றி சிறப்பாக நடைபெற்றது.
தற்போது பல்வேறு காரணங்களால் பொதுக் கலந்தாய்வு தடைபட்டுள்ளதால் மாணவா்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அரசின் தவறான முடிவு மற்றும் மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் உள்ளிட்ட காரணங்கள் போன்றவற்றால் பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளது. இதனால் காலாண்டுத் தோவு கூட முடிவடைந்த நிலையில் ஆசிரியா்கள் இல்லாமல், சில பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். கலந்தாய்வு தொடா்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவி உயா்வு, பணி நிரவல் பெற்றவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளா்த்தி 2019-20-ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாணவா்களின் கல்வி நலன் கருதியும் குடும்பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியா் பணியைத் தொடர காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்திடும் வகையிலும் ஆசிரியா் இடமாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வினை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews