நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: தேர்வுக் குழுவுக்கு மருத்துவப் பல்கலை. கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: தேர்வுக் குழுவுக்கு மருத்துவப் பல்கலை. கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மாணவர்கள் இருவர் மீது எழுந்துள்ள சந்தேகம் குறித்து உரிய ஆய்வு செய்யுமாறு மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் செயல் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்க விழா நிறைவடைந்த பின்னர், டாக்டர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீட் முறைகேடு சர்ச்சைகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு சுதா சேஷய்யன் அளித்த பதில்: எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் சந்தேகத்துக்குரிய வகையிலான சில சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் நீட் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தினோம். அதன் அடிப்படையில், பல்வேறு கல்லூரிகள் தங்களது மாணவர்களின் சான்றுகள் சரியாக இருப்பதாக பதில் அனுப்பியிருந்தன. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மட்டும் ஒரு மாணவர், ஒரு மாணவியின் புகைப்படங்களில் வேறுபாடு காணப்படுவதாக அறிக்கை அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அதுதொடர்பான தகவல்களை ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்குமாறு மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கும் நாங்கள் கடிதம் அனுப் பியுள்ளோம். இந்தப் பிரச்னை குறித்து தேர்வுக் குழுதான் விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தரப்பில் இருந்தே பதிவு எண் வழங்கப்படும். அது இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியும். கோவை கல்லூரியில் பயிலும் மாணவர்களின் விவகாரத்தில் அவர்கள் இருவரின் மீதும் எந்த சந்தேகமும் இல்லை என நிரூபணமான பிறகே பதிவு எண் வழங்கப்படும். அதுவரை அவர்களை தேர்வில் பங்கேற்க பல்கலைக் கழகம் அனுமதிக்காது என்றார் அவர். ''நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகையை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்படும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் மூன்று குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டு அருகிலேயே ரத்த பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக ரத்த பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது.எனவே காய்ச்சல் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது படுக்கை வசதி உடைய தனியார் மருத்துவமனைகளிலோ தங்கியிருந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப கட்டத்தில் இருந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நலமுடன் உள்ளனர்.தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் 'பயோமெட்ரிக்' முறையில் கைரேகை பதிவு செய்யப்படும். இந்த முறையை செயல்படுத்தும்படி 'நீட்' நுழைவு தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews