தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகராத்தில் தேவைப்பட்டால், 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவம் படிக்க சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை வேந்தர் சுதா சேஷய்யன் நீட் ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக கூறியதாவது: மாணவர் சேர்க்கைக்கும் பல்கலைக்கழகத்துக்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. மருத்துவக்கல்வி இயக்ககம் தான் மாணவர் சேர்க்கை நடத்துகிறது. பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சான்றிதழ்களை சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் 2 மாணவர்களின் புகைப்படங்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மருத்துவக்கல்லூரிகள் மட்டுமல்ல, நர்சிங் கல்லூரிகள், இந்தியமுறை மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உண்மையில் ஆள்மாறாட்டம் நடந்ததா, இல்லையா என்பதை மருத்துவக்கல்வி இயக்ககத்தின் மாணவர் தேர்வுக்குழு தான் உறுதிப்படுத்த வேண்டும். முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தான் பதிவு எண் வழங்க வேண்டும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பல்கலைக்கழகத்திடம் பதிவு எண் பெறுவதற்காக மாணவர்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். குறிப்பிட்ட 2 மாணவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களின் சான்றிதழ், புகைப்படங்களை ஆய்வு செய்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்ைல என்று தெரிந்த பின்னரே அவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் பதிவு எண் வழங்கப்படும். பல தனியார் கல்லூரிகள் ஆவணங்கள், புகைப்படங்களில் சந்தேகம் எழவில்லை என அறிக்கை அனுப்பியுள்ளன.
ஆள்மாற்ற புகார் சுமத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு பதிவு எண் வழங்குவது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டு, மருத்துவக்கல்வி இயக்ககம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசின் மருத்துவ பணிகள் இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்து வருகிறது. மருத்துவக்கல்வி இயக்ககம், பிற அமைப்புகளுடன் கலந்துபேசி, தேவைப்பட்டால் 3 ஆண்டு மருத்துவ மாணவர்களின் ஆவணங்கள், புகைப்படங்கள் சரிபார்க்கப்படும். இவ்வாறு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறினார். பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி விவகாரத்தை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி இயக்குனர், மாணவர் சேர்க்கை பிரிவு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை தேசிய தகுதித் தேர்வு முகமை ஆகியவற்றிடம் தெளிவான விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் தெரிவித்துள்ளார். என்னென்ன தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ள இந்த விளக்கத்தை கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்கள் கோவை மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவையில் மாணவி, மாணவரின் நீட் நுழைவுச்சீட்டு புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வேறு வேறாக இருப்பதாகவும், 2 மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நிர்வாகம் சார்பில், சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்ட புகாரையடுத்து கல்லூரி நிர்வாகம் நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் இரண்டு மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சுதா சேஷைய்யன், மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் மாணவர் சேர்க்கைக்கும் நேரடி தொடர்பு கிடையாது என தெரிவித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தான் மாணவர் அனுமதிக்கு பொறுப்பு எனவும் கூறினார். பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியில் இரு மாணவர்களின் புகைப்படங்களில் வேறுபாடு என்று புகார் எழுந்துள்ளது. அதில், ஆவணங்களில் பிரச்சனையா என்பதை சேர்க்கை குழு தான் கூற வேண்டும் என தெரித்துள்ளார். மாணவர்களின் உண்மை தன்மை குறித்த ஆவணங்கள் கிடைத்த பிறகே பதிவு செய்யும் பணி நடக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகத்தால் மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு தான் தேர்வு எழுத முடியும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இந்திய மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் எந்த சர்ச்சையும் இல்லை. அதேபோல, பல் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களிலும் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews