👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த, சிறப்புத் திட்டம் வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், அரசு வேளாண் கல்லுாரிகள் ஒன்று கூட இல்லை. இப்போது உள்ள, 14 வேளாண் கல்லுாரிகளும், கோவை வேளாண்மை பல்கலையின் உறுப்புக் கல்லுாரிகளாகத் தான் உள்ளன.இதனால், அக்கல்லுாரிகளில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், பல தடைகள் உள்ளன. அது மட்டுமின்றி, திருச்சிக்கு வடக்கே உள்ள, 11 மாவட்டங்களுக்கும் சேர்த்து, திருவண்ணாமலையில் மட்டும் தான், வேளாண் கல்லுாரி உள்ளது; இது போதுமானதல்ல.அதனால், இரு மாவட்டங்களுக்கு, ஒரு அரசு வேளாண் கல்லுாரி துவங்க வேண்டும். இந்தக் கல்லுாரிகளும், வேளாண் பல்கலையும் சேர்ந்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, வேளாண்மை வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.தமிழகத்தின் வேளாண் வளர்ச்சிக்கு, வலுவான அடித்தளம் அமைக்கும் இந்த கோரிக்கையை, சிறப்புத் திட்டமாக தயாரித்து, விரைந்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U