👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதவிர முதுநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்துக்கான புத்தாக்கப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சியின்போது வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல் பாடங்களின் ஆசிரியர்களுக்குப் பட்டயக் கணக்காளர் படிப்பு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனத்திலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக இப்போதைய புத்தாக்கப் பயிற்சியின் இடையே சிஏ பயிற்சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்துதர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’என கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U