👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாடு முழுவதும் சிறுமிகள், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்காக பள்ளி ஒன்றுக்கு மாதம் ரூ.3,000 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிதியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ‘நிர்பயா’நிதி அல்லது மாநில அரசின் வேறு ஏதாவது திட்டத்தின் கீழ் வழங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U