கல்வியியல் கல்லூரிகள் அதிக கட்டணம்வசூலிக்க தடை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

கல்வியியல் கல்லூரிகள் அதிக கட்டணம்வசூலிக்க தடை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், பி.எட்., - எம்.எட்., பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி கல்லூரிகளின், 65 சதவீத இடங்கள், தமிழக அரசின் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன. சுயநிதிக் கல்லுாரிகள் மட்டும் தனித்தனியாக மாணவர்களைச் சேர்த்துக்கொள்கின்றன. மாணவர் சேர்க்கைக்குக் கல்லுாரிகள் வழங்கும் விண்ணப்பங்களுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, கல்விக் கட்டணமும், லட்சக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணத்தை அதிகம் வசூலிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்துக் கல்லூரி களுக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அதில்‘கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும். கட்டண வசூல் குறித்து புகார் வந்தால், அந்தக் கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews