👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
போதையில் வந்த உடற்கல்வி ஆசிரியரால், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றும், மாணவர்களால் பங்கேற்க முடியாத பரிதாபம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. மத்துார், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து, கபடி மற்றும் வாலிபால் போட்டிகளுக்கு, உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம், 24, மாணவர்களை அழைத்து வந்திருந்தார். வாலிபால் போட்டியில், சிங்காரப்பேட்டை மாணவர்கள், அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்றனர். காசிலிங்கம், மதிய உணவிற்கு செல்வதாக, மாணவர்களிடம் கூறி சென்றுள்ளார்.
பிற்பகல், 3:00 மணிக்கு, இறுதி போட்டிக்கு, சிங்காரப்பேட்டை மாணவர்களை அழைத்தபோது, உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், விளையாட அனுமதி மறுக்கப்பட்டு, எதிர் தரப்பு மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், மனமுடைந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மாலை, 4:00 மணிக்கு, தள்ளாடியபடி போதையில் வந்த காசிலிங்கம், மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என, மிரட்டி அனுப்பினார். மாணவர்கள், விரக்தியுடன் வெளியேறினர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதியிடம் கேட்டபோது, ''காசிலிங்கம் மீது, ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கைக்கு, சி.இ.ஓ.,விடம் பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U