உயர்கல்வியில் முன்னணி அமைச்சர் பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

உயர்கல்வியில் முன்னணி அமைச்சர் பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உயர்கல்வியில், தமிழகம் முன்னணியில் இருப்பதாக, அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின், 27வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கினார். இதில், வி.சி., தலைவர் திருமாவளவன், 'மீனாட்சிபுரத்தில் நடந்த பெரும் மதமாற்றம்' என்ற தலைப்பில், குற்றவியல் துறையில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வில் அவர், '180 குடும்பங்கள் மதம் மாறியதால், பொருளாதார ரீதியாக, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை' என தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் பேசுகையில், ''2017க்கு பின், தமிழகத்தில், 17 புதிய கல்லுாரிகள், 705 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'உயர்கல்வித் துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது' என தெரிவித்துள்ளது,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews