சென்னை பல்கலை போலி அடையாள அட்டை: விசாரணை நடத்த துணைவேந்தர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 15, 2019

சென்னை பல்கலை போலி அடையாள அட்டை: விசாரணை நடத்த துணைவேந்தர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி விழாவில், சென்னை பல்கலையின் போலி அடையாள அட்டையுடன் மாணவர்கள் பங்கேற்றதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார். கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், போலி அடையாள அட்டைகள், மதிப்பெண் சான்றிதழ்களுடன், மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரிமினல் வழக்குவட மாநிலத்தை சேர்ந்த ஒருவர், வேலுாரில் உள்ள திருவள்ளுவர் பல்கலையில் படித்ததாக கூறி, அகில இந்திய அளவிலான மாணவர் அமைப்பின் தேர்தலில் போட்டியிட்டு, தலைவரானார்.ஆறு மாதங்களுக்கு முன், அம்பலமான இந்த மோசடி, தமிழக உயர்கல்வியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த ஆண்டு, மருத்துவ படிப்பு முடித்த ஒருவர், மதிப்பெண் சான்றிதழை திருத்தி, தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் சேர்ந்ததும் வெளியானது.
இதுகுறித்து, தமிழக போலீசார், கிரிமினல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சென்னை பல்கலையின் அடையாள அட்டையை, போலியாக தயாரித்த சிலர், கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பரிசுகளை பெற்றுள்ளனர்.இதழியல் பிரிவு&'தமிழ் அறிவு திருவிழா&' என்ற பெயரில், ஜன., 20ல் நடந்த இந்த நிகழ்ச்சியில், சென்னை பல்கலையின் இதழியல் படிக்கும், ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், அங்கு சென்ற நிலையில், வேறு சிலர், சென்னை பல்கலையின், இதழியல் பிரிவு மாணவர்கள் என்ற பெயரில், அடையாள அட்டையை காட்டி பங்கேற்றுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த வகையில், நான்கு மாணவர்களின் அடையாள அட்டைகள், போலியாக உள்ளதாக, சென்னை பல்கலை பேராசிரியர்கள் மற்றும் பல்கலை நிர்வாகத்துக்கு தெரியவந்துள்ளது. நான்கு அடையாள அட்டைகளும், சென்னை பல்கலை வழங்கும் அடையாள அட்டை போன்றே உள்ளது. ஆனால், மாணவர் எந்த ஆண்டு படிக்கிறார் என்ற விபரங்கள் மட்டும், இடம் பெறவில்லை.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள், தற்போது சென்னை பல்கலையில் படிக்கவில்லை என்றும், பல்கலை தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, இதழியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரச்னைஇதுகுறித்து, சென்னை பல்கலை துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:இந்த பிரச்னை, எனது கவனத்துக்கு வந்துள்ளது. போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதா, பயன்படுத்தியது யார், உதவி செய்தது யார், முன்னாள் மாணவர்கள் யாரும், அப்போதைய அடையாள அட்டையை பயன்படுத்தினரா என, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், இதழியல் துறை பேராசிரியர் ரவீந்திரனின் கவனத்துக்கும், பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவரும் விசாரணை நடத்துவதாகவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews