Breaking

Sunday, October 20, 2024

25.10.2024 தேதி SMC கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



25.10.2024 தேதி SMC கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளிகளிலும் 2024-26ம் கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பள்ளி வாரியாக எமிஸ் தளத்தில் 90 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்எம்சி குழுக்களுக்கான முதல் கூட்டம் அக்டோபர் 25ம் தேதி 3 மணி முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்; அதேபோல் அந்த உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் வாட்ஸ் ஆப் குழுவை பள்ளியளவில் தலைமை ஆசிரியர் உருவாக்க வேண்டும். முதல் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப்பொருள் குறித்து உறுப்பினர்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

எஸ்எம்சி குழுக்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் தலைமைச் செயலர் தலைமையிலான மாநில கண்காணிப்புக் குழு மற்றும் ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக் குழு குறித்து புதிய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog