Breaking

Saturday, March 28, 2026

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.

பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு, இறுதி தேர்வுகள் நடைபெறவுள்ளன.

ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஏப்.6 முதல் 16-ம் தேதி வரையிலும், 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

இதையடுத்து 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

எனினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போக வாய்ப்பு இரு்ப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறைவிடப்படுகிறது.

பள்ளிகள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் 48 நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


வினாத்தாள் பதிவிறக்கம்

இதனிடையே வினாத்தாள் பதிவிறக்கம் குறித்த வழிகாட்டு தலை மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக்கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் 1 முதல் 8-ம் வகுப்பு​களுக்கு மூன்​றாம் பரு​வத் தேர்​வுகள் (முழு ஆண்​டுத் தேர்​வு) ஏப்.1 முதல் 16-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன.

இதற்​கான கால அட்​ட​வணை ஏற்​கெனவே வெளி​யிடப்​பட்​டு, தேர்வு நடத்​து​வதற்​கான அறி​வுறுத்​தல்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த நிலை​யில், தேர்​வுக்​கான வினாத்​தாள்​களை பள்​ளி​கள் பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​படு​கின்​றன.

அதன்​படி, 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்​களின் பயிற்​றுமொழி மற்​றும் பாட​வாரி​யாக வினாத்​தாள்​களை உரிய எண்​ணிக்​கை​யில் நகலெடுத்து வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் மூல​மாக வழங்க வேண்​டும். வினாத்​தாளை எமிஸ் தளத்​தில் மார்ச் 30-ம் தேதி வரை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.



ஜூன் 4 பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஜூன் 4 பள்ளிகள் மீண்டும் திறப்பு?

தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 16 வரை நடைபெற்று முடிவடைகின்றன. அதன் பிறகு ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 48 நாட்கள் விடுமுறைக்கு பின் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தேர்தல் மற்றும் கோடை வெயில் காரணமாக இந்த அட்டவணை மாற்றப்பட்டுள்ளது


தமிழகத்தில் ஜூன் 4 அன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள செய்தி, கடந்த 2024-ஆம் ஆண்டு நிலவரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். தற்போதைய (2025-26) மற்றும் முந்தைய ஆண்டுகளின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இதோ: 2024-25 கல்வியாண்டு: முதலில் ஜூன் 6 என அறிவிக்கப்பட்டு, பின்னர் கடும் வெயில் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 10, 2024 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

2025-26 கல்வியாண்டு: வரும் புதிய கல்வியாண்டிற்கு, தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2, 2025 (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற முக்கியத் தகவல்கள்:

மாற்றங்கள்: வெயிலின் தாக்கம் அல்லது வானிலை மாற்றங்களைப் பொறுத்து, இந்தத் தேதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

விடுமுறை ஆரம்பம்: 2025-ஆம் ஆண்டிற்கான கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் தொடங்குகிறது.

கேரளா: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மட்டும் கனமழை காரணமாக ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசு அல்லது மாவட்ட கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை, முந்தைய அட்டவணையில் உள்ள ஜூன் 2, 2025 தேதியையே தற்போதைய அதிகாரப்பூர்வத் தேதியாகக் கருதலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog