பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் இருந்தால் அகற்ற உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 11, 2024

Comments:0

பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் இருந்தால் அகற்ற உத்தரவு.



பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் இருந்தால் அகற்ற உத்தரவு.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் ( Snacks Shops ) , எழுதுபொருள் அங்காடிகள் ( Stationery Shops ) , போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்திற்குள் செயல்படக்கூடாது எனவும் செயல்பட்டால் உடன் அதனை அகற்றிட கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வேலை நாள் முதல் 11.09.2024 பள்ளிகளில் இது போன்ற ( பள்ளியால் நடத்தப்படும் அங்காடி உட்பட ) அங்காடிகள் செயல்படுவதாக தெரியவந்தால் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews