சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு - 23-ஆம் தேதி கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 19, 2023

Comments:0

சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு - 23-ஆம் தேதி கடைசி நாள்

சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், மார்ச் 16: நாமக்கல் மாவட்டத்தில் சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் நான்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானோர் மார்சத் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி,நாமக்கல் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பு என்ற அலுவலகத்தில் முதன்மை சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர்-1, துணை முதன்மை சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர்-1, உதவி எதிர்வாத சட்ட உதவி வழக்குரைஞர்-2 ஆகிய காலிப் பணியிடங்கள் தகுதியான வழக்குரைஞர்கள் மூலம் நிரப்பப்படஉள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/Namakkal மற்றும் (https://www.tnlegalservices.tn.gov.in/pdfs/Application_LADCS.pdf) என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், செயலாளர், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு சாலை, நாமக்கல் மாவட்டம் - 637 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews