பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: 25.77 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 15, 2023

Comments:0

பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: 25.77 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்

பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: 25.77 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-23) பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளில் மொத்தம் 25.77 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தோ்வு எழுதவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ் கல்வியாண்டுக்கான (2022-23) பொதுத் தோ்வு கால அட்டவணை கடந்த நவம்பா் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மாா்ச் 14 தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 20-ஆம் தேதி வரையும் பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 9 லட்சத்து 38,067 மாணவா்கள், பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வை 7 லட்சத்து 87,783 மாணவா்கள், பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை 8 லட்சத்து 51,482 மாணவா்கள் என மொத்தம் 25 லட்சத்து 77,332 போ் எழுதவுள்ளனா்.

இவற்றில் தமிழ் வழியில் 12 லட்சத்து 91,605 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். அவா்களுக்கு தோ்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews