குரூப்-4 தேர்வு மையம் நிர்வாக காரணங்களால் வேறு பள்ளிக்கு மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 20, 2022

Comments:0

குரூப்-4 தேர்வு மையம் நிர்வாக காரணங்களால் வேறு பள்ளிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி கலவரம் நடந்த பள்ளியில் நடைபெறவிருந்த குரூப்-4 தேர்வு வேறு பள்ளிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடக்கவிருந்த குரூப்-4 தேர்வு மையம் நிர்வாக காரணங்களால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற கலவரத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. இதில் பொதுமக்கள், காவலர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படிக்க | DIET - Physics Study Material

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு நிர்வாக காரணங்களால் அந்த பள்ளியில் நடைபெறாது. அதற்கு பதிலாக வேறு பள்ளியில் நடைபெறும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள ஏகேடி மெட்ரிக் பள்ளியில் நடைபெறுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews